முகத்தினை மறைத்திருக்கும் கூந்தல் தனை விலக்கிவிட்டு..
புது யுகத்தினை எதிர்நோக்கும் விழிகளின் கீழ் பதிக்க துணிந்தேன்..
என் இதழ்களை..
இதழோடு வைக்கலாமா என ஒரு உட்பூசல்..
அந்த செந்நிற உதடுகளை..
என் செம்மீன் விழிகளில் நோக்கி...
கைவிரலால் தொடத்துடித்தேன்...
முடங்கிவிட்ட என் முதல் எண்ணத்திற்கு...
உயிர் கொடுத்தேன்..
பிஞ்சு கன்னங்களில் என் நெஞ்சத்தின் அன்பை முத்தத்தால் பதித்தேன்...
பெரியதென கருதாமல் பிரியமுடன் எனை நோக்கி விளையாடத் தொடங்கியது அந்ந பிஞ்சு மழலைப் பூந்தளிர்.....
No comments:
Post a Comment